சீனாவில் மீண்டும் பரவும் கொரொனா ! உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை

ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (15:00 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு சீன தேசத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் கொரோனா தொற்றுப் பரவியது.

இதனால், உலகம் முழுவதும்  பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணகான மக்கள் உயிரிழந்தனர்.

கொரொனாவின் உருமாறிய  வைரஸ் மேலும் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதன் 5 ஆம் அலை விரைவில் பரவலாம் என  உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

இந்த நிலையில், சீனாவில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரித்துள்ள  நிலையில், குளிர்காலம் என்பதாலும், பண்டிகை காலம் என்பதாலும், பல நாடுகளில் மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக WHO கூறியுள்ளது.

எனவே உலக நாடுகள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி எச்சரித்துள்ளது..

Edited by Sinoj

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்