ஆழ்கடலில் உருண்டு மிதந்து வந்த இது என்ன தெரியுமா?

வியாழன், 10 அக்டோபர் 2019 (11:00 IST)
நார்வே ஆழ்கடல் பகுதியில் பிரம்மாண்டமாக உருண்டு மிதந்து வந்த பொருள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
நார்வே ஆழ்கடலில் ஆர்ஸ்டப்ஜோர்டன் என்ற பகுதியில் 5 கடல் ஆய்வாளர்கள் கடலடி ஆய்வினை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கடலுக்குள் ஏற்பட்ட நீரோட்டத்தில் கண்டாடி போன்ர பொருள் ஒன்று உருண்டு மிதந்து வந்தது. 
 
அது என்னவென ஆய்வாளர்கள் ஆராய்ந்த போது, அது ஜெயன்ட் ஸ்குவிட் எனப்படும் கணவாய் மீனின் முட்டை என்பது தெரியவந்தது. அந்த முட்டையின் வட்டம் 13 அடி இருந்துள்ளது. 
 
முட்டையை கண்டுபிடித்த் இவர்கள், இந்த முட்டையை ஈன்ற ஜெயன்ட் ஸ்குவிட்டை தற்போது ஆழ்கடலுக்குள் தேடி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்