தற்போது, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நிலவி வருகிறது. மேலும், தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் மீது ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியும் காணப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு இதேபோன்ற மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.