தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Mahendran

சனி, 16 ஆகஸ்ட் 2025 (10:45 IST)
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
தற்போது, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நிலவி வருகிறது. மேலும், தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் மீது ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியும் காணப்படுகிறது.
 
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு இதேபோன்ற மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்