பொருளாதார மந்தநிலை பணவீக்கம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், மீண்டும் 11 ஆயிரம் ஊழியர்களை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே 13% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஆட்குறைப்பு செய்தால் இருக்கும் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவன ஊழியர்களைப்போல் பணியழுத்தம் அதிகரிக்கும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.