இந்தோனேஷியாவில் நில நடுக்கம்..20 பேர் உயிரிழப்பு

திங்கள், 21 நவம்பர் 2022 (15:17 IST)
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அடிக்கடி  நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இங்குள்ள மேற்கு ஜாவா என்ற மாகாணத்தில் இன்று திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில், 5.6 ரிக்டர் அளவுகோலாகப் பதிவாகியுள்ளது. இந்த  நில நடுக்கம் வந்தபோது, மக்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் வந்து நின்று கொண்டனர்.

இந்த நில நடுக்கத்தால், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பபடுகிறது.

மேலும், பலரின் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலலையில், அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்