சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக டஸ்ட்டிங் சேலஞ்ச் என்ற போட்டியை மேற்கொண்ட இளம்பெண் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் தற்போதைய இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மோகம் காரணமாக இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகி இருக்கின்றனர். பலரும் பணம் சம்பாதிக்க வேலைக்கு செல்லத் தேவையில்லை, இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றாலே போதும் என நினைக்கின்றனர். இதனால் பலரது கவனத்தையும் ஈர்க்க ஆபத்தான பல சேலஞ்ச்களையும் செய்கின்றனர். அப்படியான அபத்தான சேலஞ்ச் முயற்சியால் உயிரிழந்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 19 வயது இளம்பெண்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்டஹி சேர்ந்த ரென்னா ஓரூர்க் என்ற இளம்பெண் சமூக ஊடகங்களில் இன்ப்ளூயன்ஸராக பிரபலமாக வேண்டும் என வைராக்கியத்தோடு இயங்கி வந்துள்ளார். அதனால் அதிக பார்வையாளர்களை பெற அவர் டஸ்ட்டிங் சேலஞ்சை கையில் எடுத்துள்ளார். கணினியின் கீபோர்டு உள்ளிட்ட பாகங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஸ்ப்ரேயை வாயில் அடித்துக் கொண்டு சுவாசிக்கும் சவால்தான் இந்த டஸ்ட்டிங் சேலஞ்ச்
இதற்காக ஒரு புது ஸ்ப்ரேயை ஆர்டர் செய்து வாங்கி வாயில் ரென்னா ஸ்ப்ரே செய்துக் கொண்டுள்ளார், சில நிமிடங்களில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K