இனி யாரும் பசியுடன் இருக்கக்கூடாது - துபாய் அரசு புது முயற்சி!

புதன், 21 செப்டம்பர் 2022 (12:18 IST)
ஏழை குடும்பங்களுக்கு உதவுவதற்காக துபாய் முழுவதும் இலவசமாக சுடப்பட்ட ரொட்டி வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  


பல விற்பனை நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் இயந்திரங்கள் மூலம் தேவைப்படுபவர்களுக்கு புதிய ரொட்டியை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதமர் ஷேக் முகமது பின் கடந்த ஆண்டு எமிரேட்ஸ் நாட்டில் யாரும் பசியுடன் இருக்க மாட்டார்கள் என கூறினார்.

இதனை நிறைவேற்றும் வகையில் இனி யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில்,   துபாய் முழுதும் ஆங்காங்கே இலவச ரொட்டி அளிக்கும் வெண்டிங் இயந்திரங்களை துபாய் அரசு நிறுவியுள்ளது. இந்த முயற்சி, ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

துபாயின், 'அஸ்வாக்' மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், அரபி ரொட்டி மற்றும், பிங்கர் ரோல் ஆகிய இரண்டு வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பங்களிப்பாளர்கள் எங்கிருந்தாலும் ரொட்டியைத் தயாரித்து வழங்கும் இயந்திரத்தின் மூலம் நேரடியாக நன்கொடை அளிக்க அனுமதிக்கிறது.

தானம் செய்வது எப்படி?
துபாய் நவ் ஆப் அல்லது SMS மூலம் நன்கொடை வழங்க 10 திர்ஹம் நன்கொடைக்கு 3656, 3658 திர்ஹம் 50, 3659 திர்ஹம் 100 அல்லது 3679 க்கு 500. நன்கொடையாளர்கள் MBRGCEC இன் இணையதளம் வழியாகவும் இந்த முயற்சிக்கு பங்களிக்கத் தேர்வு செய்யலாம், அங்கு அவர்கள் நன்கொடைத் தொகையைக் குறிப்பிடலாம். தங்கள் நன்கொடைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவோர், ஸ்மார்ட் இயந்திரத்தை அமைப்பதன் மூலம் இந்த முயற்சிக்கு பங்களிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்