செயற்கை நுண்ணறிவு என்பது தவறு செய்யவே செய்யாது என்றில்லை என்றும், அது தவறான தகவல்களையும், கணிக்க முடியாத முடிவுகளையும் உருவாக்கக்கூடியதே என்றும் ஆல்ட்மன் தெளிவாக விளக்கினார். எனவே அதை முழு அளவுக்கு மக்கள் நம்ப வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சாட்ஜிபிடிக்கு சொந்தமான நிறுவனத்தின் தலைவரே இப்படிப் பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "மக்கள் சாட்ஜிபிடி மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், அவ்வாறு செய்யாதீர்கள். ஏனென்றால், செயற்கை நுண்ணறிவும் தவறுகளை செய்யும்" என்று அவர் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.