அமெரிக்காவில் கடந்த 2008 ஆம் ஆண்டு, பிளைய்ன் எலம் என்பவர் தன்னுடைய காதலியின் 13 மாதங்கள் குழந்தையை கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடந்த நிலையில், தற்போது அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 30 மணி நேரத்திற்கு மேலாக காதலியின் குழந்தையை சுத்தியலால் அடித்தும், பற்களால் கடித்தும் எலம் சித்திரவதை செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.