சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம்: சீனா ஆணவம்!!

வியாழன், 6 ஜூலை 2017 (14:35 IST)
டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இந்தியா சீனா நாடுகளுக்குகிடையே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. 


 
 
இந்நிலையில் அவ்வப்போது பூடான் மற்றும் இந்திய எல்லைகளில் சீனா அத்துமீறி ஊடுருவி வருகிறது. இதனால், பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
 
இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. 
 
மேலும், இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம் என கூறி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்