திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்தது - பயணிகளின் நிலை என்ன?

வியாழன், 12 மே 2022 (08:56 IST)
சீனாவின் சாங்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
113 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்களுடன் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் இருந்து திபெத்தின் நைங்கிங்கிற்குச் சென்ற விமானம் ஓடுபாதையைத் தாண்டி தீப்பிடித்தது. ஆனால் அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
விமானம் புறப்பட்டபோது ஓடுபாதையில் இருந்து விலகியதால் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீதியடைந்த பயணிகள் சம்பவ இடத்திலிருந்து ஓடும்போது, தாக்கப்பட்ட ஜெட் விமானத்தின் இறக்கைகளில் தீப்பிழம்புகள் எரிவதை சீன அரசு ஊடகங்கள் பகிர்ந்துள்ள படங்கள் காட்டுகின்றன.
 
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று திபெட் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காயமடைந்த பயணிகள் அனைவரும் லேசான காயமடைந்தனர், மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்