மாடல் அழகியை கடத்தி ஆன்லைனில் ஏலம் விட முயற்சித்த நபர் கைது

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (14:50 IST)
இத்தாலியில் மாடல் அழகியை கடத்தி இணையதளம் மூலம் ஏலம் விட திட்டமிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகி இத்தாலி மிலன் நகரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது அவரை இரண்டு நபர்கள் கடத்திச் சென்றனர். பின்னர் அவரை 6 நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்து கேட்டமின் என்ற போதை மருந்துகள் கொடுத்து சித்ரவதை செய்துள்ளனர். 
 
மேலும் ரூ.20 கோடி பணம் தராவிட்டால், அவரை இணையதளம் மூலம் ஏலத்தில் விற்பனை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனிடையே அந்த மாடல் அழகி தேடிக்கொண்டிருந்த காவல்துறையினர் மூடப்பட்ட இங்கிலாந்து தூதரகம் அருகே மீட்டனர்.
 
இதையடுத்து கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்தனர். மாடல் அழகியை கடத்திய லூகாஷ் கெர்பா என்ற நபர் போலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் இரட்டை குடியுரிமை பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்