முதன்முறையாக அண்டார்டிகாவில் தரையிறங்கிய விமானம்! – ஏர்பஸ் சாதனை!

வியாழன், 25 நவம்பர் 2021 (09:01 IST)
பனி பாலைவனமான அண்டார்டிகாவில் ஏர்பஸ் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பனி பாலைவனமாக அண்டார்டிகா உள்ளது. இங்கு மனிதர்கள் வாழ்வதற்காக ஏதுவான சூழல் இல்லாத நிலையில் ஆய்வாளர்கள் பலர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹைபிளை என்ற தனியார் விமான நிறுவனம் ஏர்பஸ் விமானத்தை அண்டார்டிகாவில் தரை இறக்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சாகச சுற்றுலா பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு 2,500 நாட்டிகல் மைல் பயணித்து அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் நிறைந்த பகுதியில் தரையிறங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்