ஹோமோசெக்ஸுக்கு அடிமையான கணவன்: மனைவியை போட்டுத்தள்ளிய பரிதாபம்

வியாழன், 6 டிசம்பர் 2018 (08:48 IST)
இங்கிலாந்தில் ஹோமோசெக்ஸிற்கு அடிமையான கணவன் தன் காதல் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவரும் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் மிடேஷ் டாக்டர் ஒருவருடன் ஹோமோசெக்ஸ் உறவில் ஈடுபட்டு வந்தார். இது ஜெசிகாவிற்கு தெரியவரவே, அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள்ளான சண்டை அதிகமாகவே ஆத்திரமடைந்த மிடேஷ், ஜெசிகாவின் உடம்பில் அதிகப்படியான இன்சுலினை செலுத்தி அவரை கொலை செய்துள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல நடித்துள்ளார்.
போலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்