5 லட்சம் கி.மீ தூரம் ….மகனை கண்டுபிடித்த தந்தை !

செவ்வாய், 13 ஜூலை 2021 (22:00 IST)
இந்த உலகில் மனிதன் பிறப்பது பெற்றோரால் தான். அவரக்ளின் அரவணைப்பில் வளர்வது ஆசீர்வாதம் என்றாலும் பெற்றோரை இழப்பதும் அவரை தவறவிடுவதும் பெரும் துக்கரமான விஷயம்.

அந்க வகையில் சீனாவில் 1997 ல் தனது 2 வயது மகனைத் தொலைத்துவிட்டு சுமார் 5 லட்சம் கிமீட்டர் தூரம் பயணித்து, தொடர் முயற்சியோடு தன் மகனைத் தேடி கண்டுபிடித்துள்ளார் தந்தை.

23 ஆண்டுகள் தொடர் தேடுதலுக்குப் பிறகு  தான் பெற்ற மகனைக் கண்டுபிடித்து அரவணைத்துக் கொண்டார்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இவர்களின் பாசம் எல்லோரது கண்களிலும் கண்ணீரை வரவழைப்பது போல் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்