10ஆம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் 47,000 பேர் தோல்வி: தமிழார்வம் குறைகிறதா?

புதன், 22 ஜூன் 2022 (13:37 IST)
சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 47 ஆயிரம் மாணவ-மாணவிகள் தோல்வியடைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தாய்மொழியான தமிழ் மொழியிலேயே 10ஆம் வகுப்பு மாணவர்கள் 40 ஆயிரம் பேர் தோல்வி அடைந்தது மாணவர்கள் மத்தியில் தமிழ் ஆர்வம் குறைகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது 
 
இதனை அடுத்து வரும் காலத்தில் தமிழ் மொழியில் மாணவர்கள் கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்