இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு 30 பேர் பலி

சனி, 29 செப்டம்பர் 2018 (10:49 IST)
இந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. பலர் சுனாமியில் காணாமல் போகினர்.
 
இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்