18 கோடியில்.... 250 கிலோ எடையுள்ள ஆடை அணிந்த பெண்!

சனி, 18 செப்டம்பர் 2021 (14:54 IST)
உலகில் மிகப்பெரிய ஆடை மற்றும் விலைமதிப்பிலான ஆடையை இந்தியப் பெண் ஒருவர் அணிந்துள்ளார்.

இந்த உலகில் உணவு, உடை, உறைவிடம் இன்றியமையாதது. இது ஏழைகளுக்கு கிடைத்தால் போதும். அதுவே பணக்காரர்களுக்கு அதிலுள்ள விலைமதிப்பிலானவைதான் வேண்டும்.

அந்தவகையில், நியூயார்க் நகரத்தில் மெட் காலா 2021 என்ற ஃபேஷன் ஷோ நடைபெற்று வருகிறது.

இதில், ஐதராபாத்தைத் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மேகா கிருஷ்ணனின் மனைவி சுதா என்பவர் சுமார் 18 கோடி மதிப்பிலான தங்கம், விலையுயர்ந்த வைரங்களால் ஆன ஆடையை அணிருந்திருந்தார். இது பார்ப்போருக்கு ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த ஆடை 250 கிலோ எடை கொண்டது குறிப்பிடத்தக்கது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்