ரஷ்ய நிலக்கரி சுரங்கத்தில் விபத்து… 14 பேர் பலி!

வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:46 IST)
ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தால் 14 பேர் பலியாகியுள்ளனர்.

ரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதியில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பேர் வேலை செய்து வந்தனர். இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 11 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களை மீட்க சென்ற 3 மீட்புப் படையினரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஆக்ஸிஜன் கையிருப்பு 6 மணி நேரத்துக்கு மட்டுமே இருந்த நிலையில் மேலும் 50 பேர் வரை இறந்திருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்