பல்கேரியா பேருந்தில் திடீர் தீ - குறைந்தது 45 பேர் பலி

செவ்வாய், 23 நவம்பர் 2021 (13:10 IST)
மேற்கு பல்கேரியாவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்குப் பிறகு போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோஃப் பிடீவி தனியார் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
 
நடந்த சம்பவத்தில் ஏழு பேர் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
துருக்கியில் இருந்து வடக்கு மாசிடோனியா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
 
திங்கட்கிழமை நள்ளிரவைக் கடந்த வேளையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியை காவல்துறையினர் சீல் வைக்கப்பட்டுள்ளனர்.
 
வடக்கு மாசிடோனியாவின் பிரதமர் ஜோரன் சேவ் ஏற்கெனவே பல்கேரிய பிரதமரை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் பற்றி விவாதித்ததாக பிடீவி கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்