சாமியாரும் டிக்கெட் செக்கரும்!
1.
என்னடா மக்கு! என்ன ரொம்ப நேரமா வெறும் உடம்போட வெயில்ல நின்னுட்டு இருக்க?
ரொம்ப வேர்வையா இருந்துச்சு அதான் வெயில்ல நின்னா காஞ்சிருமில்ல!
2.
பாஸ்! இன்னிக்குத்தான் தெரிஞ்சுது ஒவ்வொரு மூச்சிற்கும் ஒருத்தர் சாகறார் பாஸ்!
நீ பல் தேச்சிருந்தா இப்படி நடக்குமா?
3.
ரெயிலில் சாமியார் டிக்கெட் எடுக்காமல் செல்கிறார். செக்கர் அவரிடம்:
டிக்கெட் எடுங்க!
என் கிட்ட டிக்கெட் இல்ல!
நீங்க எங்க போகணும்?
நான் ராமர் பிறந்த இடத்திற்குப் போகணும்! அதாவது அயோத்தியா!
சரி! வாங்க நாம போகலாம்!
எங்க?
கிருஷ்ணர் பொறந்த இடத்துக்கு!
எங்க?
ஜெய்லுக்கு!