கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்: ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையீடு

Siva

திங்கள், 9 செப்டம்பர் 2024 (15:13 IST)
160 ஏக்கர் நிலத்திற்கு ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை செலுத்தாத விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தை தமிழ்நாடு அரசு, தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.

இந்த நிலையில் இதனை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் அவசரமாக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுகுறித்த மனுவில் கால அவகாசம் கொடுக்காமல் சீல் வைக்கப்பட்டுள்ளது என வாதம் செய்யப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில்   தகவல் தெரிவித்தது.

மேலும் குத்தகை ரத்து குறித்து நோட்டீஸ் அளித்து காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, குத்தகை ரத்து குறித்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதம் செய்தார்.  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்