யோகி பாபு கதை எழுதி நடிக்கும் படம்…. பூஜையோடு தொடக்கம்!

திங்கள், 3 அக்டோபர் 2022 (15:03 IST)
நடிகர் யோகி பாபு முதல் முறையாக கதை எழுதி ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதல் முறையாக யோகி பாபு, கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஒரு படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் அவரே நடிக்க உள்ள நிலையில் வில் அம்பு படத்தை இயக்கிய ரமேஷ் என்பவர் இயக்க உள்ளார். இன்று பூஜையோடு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்