யோகி பாபு கவனம் செலுத்தும் இரண்டு படங்கள்!

திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:50 IST)
நடிகர் யோகி பாபு இப்போது கைவசம் பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிகமாக கைவசம் வைத்திருக்கும் நடிகர் என்றால் யோகிபாபுதான். இதனால் எந்த ஒரு படத்துக்கு 5 நாட்களுக்கும் மேல் தொடர்ச்சியாக தேதிகள் ஒதுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் இப்போது அவர் பீஸ்ட் படத்துக்கு மொத்தமாக தேதிகள் ஒதுக்கி தான் சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாவற்றையும் எடுத்து முடிக்க சொல்லி வேண்டுகோள் வைத்துள்ளாராம்.

ஏனென்றால் அடுத்து அவர் ஷாருக் கான் படத்துக்காக பாலிவுட் செல்ல உள்ளாராம். அந்த படத்துக்கும் மொத்தமாக தேதிகள் ஒதுக்கி உள்ளாராம். இந்த இரண்டு படங்களுக்கு மட்டுமே இப்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்