மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா: வாய்ப்பை பறித்த விபத்து!

ஞாயிறு, 2 ஜனவரி 2022 (17:50 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் விபத்து காரணமாக அந்த வாய்ப்பை தான் இழந்ததாகவும் யாஷிகா ஆனந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா என்பதும் அவர் சிறப்பாக விளையாடினார் என்பதும் அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டின் பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள யாஷிகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் மாதம் மும்பை செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது
 
ஆனால் திடீரென ஜூலை மாதம் கார் விபத்தில் சிக்கிக் கொண்டதை அடுத்து அந்த நிகழ்ச்சியில் யாஷிகாவால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது இருப்பினும் அடுத்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா உண்டு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்