சமீபத்தில் படத்துக்கான பாடல் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தற்போது வாடிவாசல் குறித்து பேசியுள்ளார். அதில் “வாடிவாசல் படத்துக்கானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூலை மாதத்தில் படப்பிடிப்புத் தொடங்கும். சமீபத்தில் ஒரு பாடலை அற்புதமான வரிகளோடு பதிவு செய்துள்ளோம். வெற்றிமாறன் திரைக்கதையில் அரைமணிநேரப் பகுதியை விவரித்தார். நான் ஆச்சர்யத்தில் மூழ்கிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.