ஜாக்கி ஷெராப்புக்கு ஏன் தமிழ்ப் படங்கள் சிரமமாக இல்லை?

வெள்ளி, 8 ஜூலை 2016 (16:29 IST)
ஆரண்ய காண்டம் படத்தை தொடர்ந்து சி.வி.குமார் இயக்கும் மாயவன் படத்திலும் வில்லனாக நடிக்கிறார் ஜாக்கி ஷெராப்.


 


தமிழில் நடிப்பது தனக்கு சிரமமாக இல்லை, எப்போதும் சௌகரியமாகவே உணர்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
 
"கடந்த 25 வருடங்களாக நான் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறேன். முன்பு நான் நடித்த பல படங்கள் சென்னையில் உள்ள ஜெமினி, விஜயா வாகினி ஸ்டுடியோக்களில் தயாராகியிருக்கின்றன. வணக்கம், சாப்டியா, சௌக்கியமா, அப்படியா போன்ற வார்த்தைகள் எனக்கு தெரியும். இப்போது இன்னும் கவனமாக தமிழ் பேசுவதை கவனித்து வருகிறேன்" என்றார்.
 
சி.வி.குமாரின் மாயவன் படத்தில் ஜாக்கி ஜெராப்பை பரிந்துரைத்தவர் ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா என்பது முக்கியமானது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்