துப்புரவு பணியாளர்களிடம் நட்பு பாராட்டிய மணிமேகலை - வைரல் புகைப்படம்!

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (10:41 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வருகிற 14ம் ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் முழித்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் சென்னை திரும்ப முடியாமல் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அங்கிருந்த படியே கிராம குழந்தைகளுடன் விளையாடுவது , முறுக்கு சுடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அவர் தங்கியிருக்கும் கிராமத்தில் துப்புரவு பனி செய்யும் பெண்களுடன் எடுத்துக்கூட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு "இரண்டு நாளில் நாங்கள் பிரண்ட்ஸ் ஆகிட்டோம்..  இந்த வெயிலிலும் இப்படி ஒரு நேரத்திலும் கடினமாக உழைக்கிறார்கள்.  என்று கூறி அவர்களை பாராட்டியுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

நான் தங்கியிருக்கும் கிராமத்தின் தூய்மை பணியாளர்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்