’சக்ரா’ படத்திற்கு நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடை நீக்கம்.

வியாழன், 18 பிப்ரவரி 2021 (16:10 IST)
விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படத்திற்கு சமீபத்தில் சென்னை ஐகோர்ட் தடை விதித்த நிலையில் அந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக விஷால் அறிவித்துள்ளதால் இந்த படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
விஷால் நடித்த வலிமை திரைப்படத்தின் மீது டிரைடண்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்த போது ’சக்ரா’ திரைப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இதனால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் ’சக்ரா’ படத்திற்கு ஏற்பட்ட அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து நாளை முதல் இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று விஷால் தனது டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்