என் அடுத்த படத்தையும் இவர்தான் இயக்குகிறார்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த விக்ரம்

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:50 IST)
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த  ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில் விக்ரம் மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதை தற்போது விக்ரம் உறுதிப் படுத்தியுள்ளார். சமீபத்தில் டிவிட்டர் ஸ்பேஸில் கோப்ரா படக்குழுவினருடன் நடந்த உரையாடலில் கலந்துகொண்ட விக்ரம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் கேஜிஎப் பின்னணியிலான கதையில் நடிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்