விருது கிடைக்கும் என்பதற்காக நடிக்கவில்லை…. விஜய் சேதுபதி கருத்து!

திங்கள், 25 அக்டோபர் 2021 (12:18 IST)
நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தேசிய விருதினை பெறுகிறார்.

2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அந்த பாத்திரத்துக்காக இந்த ஆண்டு அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இதை வாங்க டெல்லி சென்றுள்ள விஜய் சேதுபதி அங்கே அளித்துள்ள பேட்டியில் இந்த பாத்திரத்துக்கு விருது கிடைக்கும் என்று நம்பி நடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘இது முழுக்க முழுக்க இயக்குனரை நம்பி நான் ஏற்றுக்கொண்ட பாத்திரம். எனவே இந்த நேரத்தில் அவருக்குதான் நன்றி சொல்லவேண்டும். விருது பெறுவது புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. விருதை விட பல மொழி பேசும் கலைஞர்களை சந்தித்ததுதான் மகிழ்ச்சியாக உள்ளது. பிற மொழிக் கலைஞர்கள் என் படத்தை பார்த்ததாக சொன்னது மிகுந்த மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்