பூஜா ஹெக்டேவுக்காக கொள்கையை தளர்த்தினாரா விஜய்?

புதன், 4 ஆகஸ்ட் 2021 (18:43 IST)
தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தான் பல வருடங்களாக கடைபிடித்துவரும் கொள்கையை தளர்த்தியதாக கூறப்படுகிறது
 
தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக விஜய் ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்று கூறப்பட்டது. வெளிநாட்டு படப்பிடிப்பு ஆக இருந்தால் கூட ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் விடுமுறை எடுத்துக் கொள்வார் என்பது தான் அவரது கொள்கையாக இருந்தது 
 
ஆனால் தற்போது பூஜா தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருப்பதால் அவருக்காக தனது கொள்கையை தளர்த்திக் கொண்டு அவர் ஞாயிற்றுக்கிழமையும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்