விஜய்யுடன் இணைவது உறுதி… வெற்றிமாறன் தகவல்!

திங்கள், 29 மார்ச் 2021 (08:25 IST)
இயக்குனர் வெற்றிமாறன் தனது படங்களை முடித்துவிட்டு விஜய்க்காக காத்திருக்க போவதாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன் பட வெற்றிக்குப் பின்னர் அவர் விஜய்யை சந்தித்து ஒரு கதையைக் கூறியுள்ளார். விஜய்க்கும் அந்த கதை பிடித்துவிடவே நடிக்க சம்மதித்தார். ஆனால் ஏற்கனவே வெற்றிமாறன் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தம் ஆகிவிட்டதால் அவரால் உடனடியாக விஜய்யோடு இணைய முடியவில்லை. இதனால் இப்போது விஜய் படத்தை நெல்சன் தீலிப்குமார் இயக்க உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அசுரன் படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில் விஜய்யுடன் இணைவது குறித்து பேசிய வெற்றிமாறன் தனது கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு விஜய்க்காக காத்திருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்