முதல் முறையாக வெப் தொடரை இயக்க தயாராகும் வசந்த பாலன்… அவரே வெளியிட்ட அறிவிப்பு!

வெள்ளி, 22 ஜூலை 2022 (15:38 IST)
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் தற்போது அநீதி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

தற்போது, விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் மூலம் தன்னுடைய ’அநீதி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் அநீதி படத்துக்குப் பிறகு வசந்தபாலன் வெப் தொடர் ஒன்றை இயக்க உள்ளார். இந்த வெப் தொடர் ஜீ 5 தளத்திற்காக உருவாக்கப்படுகிறது. இதை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அவரே அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்