என் உடைகளைப் பற்றி நான் கவனமாக இருக்கிறேன்… ரசிகர்களின் கமெண்ட்டுக்கு வாணி போஜன் பதில்!

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (17:31 IST)
நடிகை வாணி போஜன் தனது சமீபத்தைய போட்டோஷூட் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

ஒரு காலத்தில் சீரியலில் நடிக்கும் நடிகைகளை சினிமாவில் நடிக்க வைக்க யோசிப்பார்கள் . அப்படியே நடித்தாலும் அண்ணி தங்கை வேடங்கள் மட்டுமே கொடுப்பார்கள். அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருகிறார்.

அவருக்குப் பிறகு சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார்.  சன் டிவியில் ஒளிபரப்பான " தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படு பேமஸ் ஆகிவிட்டார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த  ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

அதையடுத்து அவர் நடித்துள்ள லாக்கப் படம் ஓடிடியில் ரிலிஸாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு இப்போது வரிசையாக வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. லாக் அப் படமும் நல்ல வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வாணி போஜன் வெளியிட்ட சில கவர்ச்சியான புகைப்படங்கள் வைரலாகப் பரவின. ஆனால் சில ரசிகர்கள் அதுகுறித்து எதிர்மறை விமர்சனங்களை வைத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வாணி போஜன் ‘நான் என்ன உடைகள் அணிகிறேன் என்பது குறித்து கவனமாக இருக்கிறேன். அதுபோல ஒருவர் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை ‘ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்