வையாபுரியை வருத்தப்பட வைத்த பிக்பாஸ் பிரபலங்கள்..

வியாழன், 1 பிப்ரவரி 2018 (16:21 IST)
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகர் வையாபுரி. இந்த நிகழ்ச்சி முலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

 
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான வையாபுரி நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே பிக்பாஸ் வீட்டை விட்டுப் போகிறேன் என அழுது கொண்டே இருந்தார். அதனால் மக்களிடம் பெருகிய  அனுதாபத்தால்  80 நாட்கள் வரை மக்களால் வெளியேற்ற படாமல் இருந்தார். தற்போது, தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். 
 
இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, போட்டி முடிந்து வெளியே போனதும் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்போம், ஓன்றாக ஊர் சுற்றுவோம் என கூறியவர்கள். இப்போது என் போன் அழைப்பை கூட எடுப்பதில்லை என புலம்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்