வேண்டுமென்றே தலைப்பு வைத்த வடிவேலு & கோ- நிராகரித்து அனுப்பிய கவுன்சில்!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:00 IST)
வடிவேலு திரும்பவும் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு சம்மந்தமாக பிரச்சனைகள் எழுந்துள்ளன.

வடிவேலு பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு நாய்சேகர் என்ற தலைப்பு வைக்க அவர்கள் விரும்பிய நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் அதை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்து விட்டு கொடுக்க மறுத்தது.

இந்நிலையில் இப்போது தங்கள் படத்துக்கு வடிவேலுவின் நாய்சேகர் என பெயர் வைத்து அதை பதிவு செய்ய கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் கவுன்சில் அந்த தலைப்பை ஏற்க மறுத்துவிட்டதாம். இதனால் இப்போது கதைக்கு பொருத்தமான வேறு ஒரு தலைப்பையும் தேடி வருகிறார்களாம். மேலும் படத்தில் செண்டிமெண்ட்டாக இருக்கும் காட்சிகளையும் குறைத்துவிட்டு காமெடிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள விதமாகவும் மாற்றியுள்ளார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்