இப்படி ஒரு நடிகையா என ஆச்சர்யப்பட்டேன்… ஊர்வசியின் பெருந்தன்மையை பாராட்டிய தியாகராஜன்!

vinoth

வியாழன், 25 ஜூலை 2024 (10:48 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக். இந்த படம் உருவாகி சில ஆண்டுகள் ஆனபின்னும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த் இந்த படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்துள்ளார். படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் ஊர்வசி நடித்துள்ளார்.

படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவரை பற்றி ஒரு நெகிழ்வான சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார், தியாகராஜன். அதில் “இந்த படத்தின் டப்பிங்குக்காக வந்த ஊர்வசி, ஒரு கவரை என்னிடம் கொடுத்தார். அதில் நிறைய பணம் இருந்தது. இந்த படத்துக்கு எனக்கு நீங்கள் அதிக சம்பளம் கொடுத்து விட்டீர்கள். இதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகையா என நான் ஆச்சர்யம் அடைந்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்