ரிமோட் கண்ரோலில் தமிழகம்: உதயநிதி காட்டம்!!

வியாழன், 23 பிப்ரவரி 2017 (16:54 IST)
தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது. இதில் மு.க.ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.


 
 
நானும் தி.மு.க.வில் உறுப்பினர்தான். இது ஒரு கட்சியின் பிரச்சினை கிடையாது. தமிழகத்தின் பிரச்சினை. அதனால் நானும் மக்களோடு மக்களாக உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டேன் என தெரிவித்தார்.
 
மேலு, ஒரு பார்வையாளனாக என்னை கேட்டால், அரசின் மீது அதிருப்தியில் உள்ளேன். சிறையில் இருந்து கொண்டு ஒருவர் ரிமோட் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தனது எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்