இதனிடையே பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் கோவையிலிருந்து 2 பேரும், பாலக்காட்டிலிருந்து மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி இரண்டு தலைமறைவாக இருந்தனர். நீதிமன்றத்தில் சரணடைய வந்த பல்சர் சுனில் மற்றும் விஜேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சுனில் மற்றும் விஜேஷ் காவல்துறையினரிடம், பாவனாவிடம் பணம் பறிக்கவே அவரை கடத்தினோம், அவர் முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம் என கூறியுள்ளனர்.