டிக்டாக் பிரபலம் சியா கக்கார் தற்கொலை – அடுத்தடுத்து நிகழும் சோகம்!

வெள்ளி, 26 ஜூன் 2020 (07:56 IST)
டிக்டாக்கில் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்ற 16 வயது பெண் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமான சியா கக்கார் என்ற 16 வயது பெண் டெல்லியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது வீடியோக்களின் மூலமாக பிரபலம் ஆன அவருக்கு 11 லட்சத்துக்கும் மேலாக பாலோயர்கள் உள்ளனர். அவரது தற்கொலை பற்றி அவரது மேலாளர் அர்ஜுன் சரின் ‘இந்த மரணம் அவரது தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். பணி சம்மந்தமாக அவர் நிறைவாக இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் கூட புதிதாக ஒரு பணி குறித்து பேசினேன். அவர் மிகவும் திறமையானவர்.’ எனக் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சோகம் முடிவதற்குள் மீண்டும் ஒரு தற்கொலை நிகழ்ந்திருப்பது மேலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்