வில்லன் பட வாய்ப்புகள் பெருகுவதால் சம்பளம் உயர்த்திய ஹீரோ

செவ்வாய், 21 ஜூன் 2022 (17:44 IST)
நடிகர் விஜய் நடிப்பில் உருவான பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக அறிமுகம் ஆனவர் ஜெய். இவர் சென்னை68, சுப்பிரமணியபுரம், வாமனன், புகழ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தற்போது பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி ஹீரோவாக  நடிக்கும் ஒரு பட்டாம்பூச்சி என்ற படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்கவுள்ளார்.

த்ரில்லார் பாணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கு நடிகர் ஜெய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் இடம்பெற்றுள்ள ஒரு குத்துப்பபாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இப்படாலை இசையமைப்பாளரும் ஜெய்யின் சித்தப்பாவுமான ஜெய் பாடியுள்ளார். இப்பாடல் சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த நிலையில்,   நடிகர் ஜெய்க்கு ஹீரோவாய்ப்புகள் குறைந்து,  தற்போது, வில்லன் கதாப்பாத்திரங்கள் அதிகம் தேடி வருவதால், அவர் விஜய் சேதுபதிபோல் வில்லனாக நடிக்கவும் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஆனால், ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதில் நடிக்கவும் இதற்கிடையே வில்லனாக நடிக்கவும் முடிவெடுத்துள்ளதாகவும்,இதற்கு  அதிக சம்பளம் ஜெய் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்