அமீர் கான் நடிப்பில் இந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகியுள்ள ஸித்தாரே ஸமீன் பர் (Sitaarwe Zameen Par) நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கூடைப்பந்து பயிற்சியாளரான குல்ஷன் (ஆமிர் கான்) கோபக்காரராகவும், கர்வம் மிக்கவராகவும் இருக்கிறார். இதனால் அவரது மனைவி சுனிதா (ஜெனிலியா) அவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். கோபக்காரரான குல்ஷன் தனது சீனியர் கோச்சை அடித்தது, குடித்துவிட்டு வண்டி ஓட்டியது என பல புகார்களில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.
அங்கு அவரை அறிவுசார் மாற்றுதிறனாளி மாணவர்களின் கூடைப்பந்து அணிக்கு அவர் பயிற்சியாளராக இருந்து பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடுகின்றனர். அதற்கு அவர் அவர்களை பைத்தியம் என்று பேசுவதால் மேலும் சிக்கலுக்கு உள்ளாகிறார்.
இதுபோல மற்றவர்கள் குறைகளை எந்த கவலையும் இன்றி கிண்டல் செய்யும் குல்ஷன், ஆரம்பத்தில் அந்த அறிவுசார் திறனாளி மாணவர்ளிடம் ஒட்டாமல் போனாலும், போகபோக அவர்கள் மூலமாக வாழ்க்கையின் அர்த்ததை கண்டடைகிறார். கற்றுக் கொள்கிறார். அதேசமயம் இவர்களது கூடைப்பந்து அணிக்கு எதிரணியாக வரும் ஒரு அணியின் பயிற்சியாளருக்கும் குல்ஷனுக்கும் முட்டிக் கொள்ள அவரது ஈகோ அதிகமாகிறது. அந்த அணியை தனது அறிவுசார் திறனாளிகள் அணிக் கொண்டு வீழ்த்தி காட்ட குல்ஷன் களமிறங்குகிறார்.
இந்த போட்டியில் அவர்கள் வென்றார்களா? திமிர் பிடித்த குல்ஷன் மனிதநேயத்தை எப்படி தனது மாணவர்களிடம் கற்றுக் கொண்டார்? என்பதை முழுவதும் காமெடி, எமோஷன் கலந்த படமாக அளித்துள்ளார் இயக்குனர் ஆர்.எஸ்.ப்ரசன்னா. இரண்டாம் பாதியில் சில ஓவர் எமோஷனல் காட்சிகள் அயற்சியை ஏற்படுத்தினாலும், மொத்தமாக படமாக ஒரு ஃபீல்குட் படமாக அமைந்திருக்கிறது ஸித்தாரே ஸமீன் பர்.
Edit by Prasanth.K