150 நாட்களாக விட்டைவிட்டு வெளியே வராத சூப்பர் ஸ்டார் !

புதன், 5 ஆகஸ்ட் 2020 (20:24 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி  இந்த கொரொனா காலத்தில் தொடர்ந்து 150 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரொனாவால் 18 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமாப் படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி தரவில்லை.

இந்நிலையில், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சமீபத்தில் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது, இந்தக் கொரோனா காலம் எத்தனை நாட்கள் நீடிக்கிறதோ அத்தனை நாட்களும் வீட்டிலேயே இருக்கப்போவதை சவாலாக என் தந்தை எடுத்துக்கொண்டார் எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்