பிரபல நடிகர் எடுத்த திடீர் முடிவு …. ரசிகர்கள் அதிர்ச்சி

வியாழன், 28 மே 2020 (17:44 IST)
இசையமைப்பாளரும் இயக்குநரும் பாடலாசிரியருமான கங்கை அமரனின் மகன் பிரேம் ஜி அமரன். இவரும் நடிகர் இசையமைப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார்.

தற்போது இவரது அண்ணன் இயக்கி வரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், என் வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என கூறிவிட்டேன். வாழ்க்கையில் நிம்மதியாக வாழ  நிம்மதியாகவும் ஜாலியாகவும் வாழ விரும்புகிறேன். அதனால் நமக்கு எதுக்கு கலியாணம் குழந்தை குட்டி எல்லாம் …தனியாக இருப்பதே மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டில் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனல் முடியாது என்று சொல்லிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்