மகனுக்கு பீஸ் கட்ட முடியாமல் ,நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி வருத்தம்

திங்கள், 18 பிப்ரவரி 2019 (14:42 IST)
தமிழகத்தில் மிகச்சிறந்த பேச்சாளரான வைகோவின் மதிமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியமானவர் நாஞ்சில் சம்பத். பின்பு ஜெயலலிதாவால் அதிமுகவில் சேர்ந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் தினகரன் ஆதரவாளராக இருந்தவர் தற்பொழுது அரசியலை ஓரம் கட்டிவிட்டு இப்போது பிரபல சேனலில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் எல்கேஜி என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகன் ஆர்ஜே.பாலாஜி ஆவார். 
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது:
 
நாஞ்சில் சம்பத் சார் மிகவும் நன்றிகுரிய மனிதர். இப்படத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவருக்கு தொலைபேசியில்  தொடர்பு கொண்ட்டு அவர் இல்லத்துக்கு சென்றேன். பட்டிணப்ப்பாக்கத்தில் 600 சதுர அடியில் சிறிய வீடு அவருடையது.படத்தின் கதையை சொல்லி எனக்கு அப்பாவாக நடிங்க சார் என்று கேட்டேன். யோசித்த பின் நடிப்பதாக கூறினார். 
தற்போது கல்லூரியில் படிக்கும் அவரது  மகனுக்கு பீஸ் கட்ட பணம் இல்லாமல் உள்ளார். அவருடைய குணத்துக்கு ஏற்ப படத்தில் அவருடைய  கேரக்டர் மாத்தினோம். அடுத்து சிவ கார்த்திகேயன் படத்தில் நடிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்