பொங்கல் தினத்தில் 'அறம்' தயாரிப்பாளரின் அடுத்த படம் ரிலீஸ்

வியாழன், 30 நவம்பர் 2017 (20:22 IST)
சமீபத்தில் வெளியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'அறம்' படத்தை தயாரித்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் நல்ல லாபத்தை பெற்ற நிலையில் தற்போது இந்த நிறுவனம் தயாரித்து வரும் அடுத்த படமான 'குலேபகாவலி' திரைப்படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்கி வருகிறார். விவேகா மற்றும் மெர்லின் இசையமைத்து வரும் இந்த படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அதே விறுவிறுப்பில் இரவுபகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்