நடிகைகள் விளம்பரம் செய்வதால் மட்டும் படம் ஓடுமா?: நயன்தாரா கேள்வி

புதன், 25 ஜனவரி 2017 (15:22 IST)
சினிமா திரைப்பட புரமோஷனுக்கு ஹீரோயின்கள் கலந்துகொள்ளாதது பற்றி அடிக்கடி பேசப்பட்டவர் நயன்தாரா, சமீபத்தில்  படத்தின் புரமோஷனுக்கு ஹீரோயின்கள் வந்துவிட்டால் மட்டும் மோசமான படத்தை ஓடவைக்க முடியுமா? என நடிகை  நயன்தாரா கேள்வி எழுப்பியுள்ளார்.

 
பேட்டி ஒன்றில் பதிலளித்த நயந்தாரா எனக்கென்று சில கொள்கைகளை வைத்திருக்கிறேன். தயாரிப்பாளர் என்னிடம் கதை  சொல்ல வரும்போதே நான் விழாக்களில் கலந்துகொள்ளமாட்டேன் என்று சொல்லிவிடுகிறேன்.
 
இன்று எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. வித்தியாசமான விளம்பர உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தனி ஒருவன்,  மாயா போன்ற படங்களை நான் விளம்பரப்படுத்தியுள்ளேன். சிறிய படங்களுக்கும், நான் கட்டாயம் விளம்பரம் செய்தே  ஆகவேண்டிய சமயங்களிலும் நான் என்னால் முடிந்தவற்றைச் செய்கிறேன். 
 
நடிகர் நடிகைகள் விளம்பரம் செய்வதால் ஒரு மோசமான படத்தை ஓடவைக்க முடியாது. ஒரு படம் எவ்வாறு விளம்பரம்  செய்யப்படுகிறது என்பதை விட, அதன் கதை நன்றாக இருந்தால்தான் ஓடுகிறது. ஒரு மோசமான படத்தை 100 நாள்கள்  விளம்பரம் செய்தாலும் தோல்விதான் கிடைக்கும். 
 
திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளாத நடிகைகளைத் தண்டிக்க, கடைசிப் பகுதிச் சம்பளத்தைத் தரவேண்டாம் என்று விவேக்  சார் சொன்னது ஏற்புடையதாக இருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பல நேரங்களில் என் சம்பளத்தையே   விட்டுக்கொடுத்துள்ளேன். சில படங்களுக்கு என் சம்பளத்தைக் குறைத்துள்ளேன். இவ்வாறு நயந்தாரா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்