தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப விண்ணப்பித்துள்ளோம்… தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல்!

vinoth

சனி, 10 ஆகஸ்ட் 2024 (07:21 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்கவயலில் வேலை செய்த தமிழர்களைப் பற்றிய படமாக தங்கலான் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் தனஞ்செயன் படம் பற்றி பேசும்போது “தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப தேசிய திரைப்பட கூட்டமைப்பிடம் விண்ணப்பித்துள்ளோம். இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் தங்கலான் இருக்கும் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்