ஜிகர்தண்டா -2 பட சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

புதன், 8 நவம்பர் 2023 (19:52 IST)
2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை  கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.  இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தில் நடிகர்   ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட  நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜிகர்தண்டா-1  பேட்ட உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை பீரியட் திரைப்படமாக உருவாக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் முடிந்து,   தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்  இப்படம் வரும்  நவம்பர் 10 ஆம்தேதி ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில்,ஜிகர்தண்டா டபுளெக்ஸ் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும்   நவம்பர் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சிறப்பு காட்சி திரையிடலாம் என அரசு அறிவித்துள்ளது.

இப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 52 நிமிடம் ஓடும்  எனத் தகவல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்